உள்ளூர் செய்திகள்

வேப்பந்தட்டை முழு நேர கிளை நூலகத்தில் வார விழா

Published On 2022-12-22 13:46 IST   |   Update On 2022-12-22 13:46:00 IST
  • வேப்பந்தட்டை முழு நேர கிளை நூலகத்தில் வார விழா நடந்தது.
  • மாவட்ட நூலக அலுவலர் சந்திரசேகரன் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை முழு நேர கிளை நூலகத்தில் 55-வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. விழாவையொட்டி பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகரன் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும் புதிதாக இணைந்த நூலக புரவலர்களுக்கு மாவட்ட நூலக அலுவலர் சந்திரசேகரன் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். விழாவில் வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நூலகர் கூத்தரசன் வரவேற்று பேசினார். முடிவில் நூலகர் சித்ரா நன்றி கூறினார்.


Tags:    

Similar News