- குரும்பலூர் அரசு கலைக்கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
- நீதிபதி சந்திரசேகர் பங்கேற்று பேசினார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே குரும்பலூர் அரசு கலைக்கல்லூரியில், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், பெரம்பலூர் இந்தோ டிரஸ்ட்டும் இணைந்து தனி நபர் கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாமினை நடத்தியது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் ரேவதி தலைமை வகித்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைமை சட்ட உதவி ஆலோசகர் வக்கீல் சீராஜுதீன், உதவி ஆலோசகா வக்கீல் தினேஷ், இந்தோ டிரஸ்ட் மேலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சப்-கோர்ட் நீதிபதியுமான சந்திரசேகர் பேசுகையில், மனித கடத்தல் நவீன முறையில் இப்போது நடந்து வருகின்றது. மனிதர்களின் உடல் உறுப்புகளை திருடுவதற்காகவும். மனிதர்களை கொத்தடிமைகளாக்க வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுகின்றனர். இதனை தடுத்து நிறுத்துவதற்கு பல வழிமுறைகளை அரசு கடைபிடித்து வருகிறது. அவசர உதவி எண் 181 மற்றும் 1098 ஆகும். மாணவர்கள் ஆள் கடத்தல் தொடர்பாக தகவல் கிடைக்கும் பட்சத்தில் இந்த நம்பரில் தொடர்பு கொண்டு தகவல் அளித்து மனித கடத்தலை தடுப்பதற்கு உதவிட வேண்டும் என தெரிவித்தார். இதில் மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாக சமூக பணித்துறை தலைவர் செல்லம் வரவேற்றார். முடிவில்ச ட்டப்பணிகள் ஆணைக்குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் கலைவாணன் நன்றி கூறினார்.