உள்ளூர் செய்திகள்

நான் முதல்வன் நிகழ்ச்சி

Published On 2022-11-20 07:02 GMT   |   Update On 2022-11-20 07:02 GMT
  • நான் முதல்வன் நிகழ்ச்சி நடைபெற்றது
  • மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

பெரம்பலூர்:

செட்டிகுளம், அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் "நான் முதல்வன்" நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திட்டத்தின்கீழ் 11 மற்றும்12 ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வேலைவாய்பு வழிகாட்டி நிகழ்ச்சி பள்ளியின் தலைமையாசிரியர் பொன்னுதுரை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடாலூர், பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயற்பியல் பாட விரிவுரையாளர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நான் முதல்வன் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீரங்கன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உயர்கல்வியின் அவசியத்தையும் , அதன்மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்பு பற்றியும் , கல்லூரிகளில் உள்ள அனைத்து பாடப்பிரி வுகளைப்பற்றியும், பொறியியல் கல்லூரி சேர்க்கை மற்றும் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை மற்றும் நுழைவத் தேர்வுகள் குறித்தும், நான் முதல்வன் வலைதளத்தின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்து, விழிப்புணர்வு தந்து ஊக்கப்படுத்தினார்.

Tags:    

Similar News