உள்ளூர் செய்திகள்

பெண்ணை கல்லால் தாக்கிய கணவர் கைது

Published On 2023-07-30 12:18 IST   |   Update On 2023-07-30 12:36:00 IST
  • பெண்ணை கல்லால் தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்
  • கூலி வேலைக்கு சென்ற பெண்ணின் மீது, மகனை ஒப்படைக்க கேட்டு தாக்குதல்

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் ஆதிதிராவிடர் தெருவை சோ்ந்தவர் அறிவழகன்(வயது 40). இவரது மனைவி கவிதா(35). இவர்களுக்கு 6 வயதில் கருணேஸ்வரன் என்ற மகன் உள்ளான். கடந்த 5 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக அறிவழகனும், கவிதாவும் பிரிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். மகனை கவிதா வளர்த்து வருகிறார். மேலும் அறிவழகனுக்கும், கவிதாவுக்கும் விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்த கவிதாவிடம் மகனை தன்னிடம் கொடு என்று கேட்டு அறிவழகன் தகராறு செய்தாராம். பின்னர் அவர் கீழே கிடந்த கல்லை எடுத்து கவிதாவின் தலை மற்றும் முதுகில் தாக்கியுள்ளார். இதனை கண்ட அருகில் உள்ளவர்கள் சத்தம் போட்டு காயமடைந்த கவிதாவை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது தொடர்பாக கவிதா கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிவழகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News