உள்ளூர் செய்திகள்

புதுமாப்பிள்ளை தற்கொலை

Published On 2023-07-03 11:17 IST   |   Update On 2023-07-03 11:17:00 IST
  • புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.
  • காதல் மனைவி சேர்ந்த வாழ வராததால் சம்பவம்

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே எளம்பலூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 26). இவர் எளம்பலூர் கிராம ஊராட்சியில் தூய்மை பணியாளராக கடந்த 1 மாதமாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்க சென்ற பார்த்திபன் நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டின் முன்பு உள்ள ஆஸ்பெடாஸ் மேற்கூரை கம்பியில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து அக்கம், பக்கத்தினர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக பார்த்திபனின் தந்தை லெனின் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். கடந்த 10-ந் தேதி காதல் திருமணம் நடந்துள்ளது. குடும்ப தகராறில் மனைவி சேர்ந்த வாழ வராததால் பார்த்திபன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரியவந்தது.

Tags:    

Similar News