உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் அரசு ஊர்தி டிரைவர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்

Published On 2023-05-15 12:59 IST   |   Update On 2023-05-15 12:59:00 IST
  • பெரம்பலூரில் அரசு ஊர்தி டிரைவர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
  • இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

பெரம்பலூர்,

பெரம்பலூரில் அரசு துறை ஊர்தி டிரைவர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சகாதேவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வெளி மாவட்ட ஓட்டுநர்கள் இயற்கை இல்லா மரணம் அடைந்தால் நமது சங்க உறுப்பினர்களால் இயன்ற தொகையை சேர்த்து சங்கத்தின் பெயரில் உதவி தொகையாக வழங்க வேண்டும், சங்க உறுப்பினர்கள் இயற்கை மரணம் அல்லது அகால மரணம் அடைந்தால் உதவியாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்,அதேபோல் மற்ற மாவட்டங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், தர ஊதிய முரண்பாட்டை களைந்து புதிய ஊதிய திருத்தத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதியத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், டிரைவர்களுக்கு கல்வி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்,15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களுக்குப் பதிலாக புதிய வாகனங்களை வழங்க வேண்டும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, அதனை தொடர்ந்து சென்னையில் வருகின்ற 22-ம்தேதி நடைபெறும் கோட்டை நோக்கி பேரணியில் கலந்துகொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News