- பெரம்பலூர் இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா
- கலெக்டர் கற்பகம் வழங்கினார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் கற்பகம், குரும்பலூரில் விளிம்பு நிலையில் உள்ள இருளர் இன மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளையும், முதலமைச்சரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ. 3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள இருளர் இன மக்கள் குடிநீர், கழிவறை வசதிகள், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர், இங்குள்ள மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுவிட்டதா, எத்தனை பேருக்கு வழங்க வேண்டும் என வருவாய்த்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து, மக்களுக்குத் தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, தயாராக இருந்த 23 பேரின் இ பட்டாக்களை 20 பேருக்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் வழங்கினார். குரும்பலூர் பேரூராட்சித் தலைவர் சங்கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன், ஸ்டாலின் செல்வகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் மெர்சி, பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.