வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி
- வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது
- அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது புகார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே கவுள்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்வகுமார் (வயது 42). இவர் பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் ஏடிஎஸ்பி மதியழகனிடம் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது, எனது மனைவி மகேஸ்வரி தமிழ் துறையில் முனைவர் பட்டம் பெற்று தற்சமயம் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குனர் பணிக்கு நேரடி நியமனத்தின் மூலம் பணி நியமனம் பெற்றுத் தருகிறேன் என முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்செல்வன் கூறியதை நம்பி அவரிடம் ரூ. 22.50 லட்சம் கொடுத்தேன்.
ஆனால் பணி வாங்கி தரவில்லை. இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் நான் பலமுறை நேரில் சென்றும், போன் மூலமும் பணத்தை கேட்டும் கொடுக்கவில்லை, இந்நிலையில் கடந்த மே மாதம் 18ம்தேதி நான் நேரில் சென்று பணம் கேட்டபோது தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். எனவே முன்னாள் அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை பெற்றுத்தர வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளார்.