உள்ளூர் செய்திகள்

விவசாயி தற்கொலை

Published On 2023-04-19 14:20 IST   |   Update On 2023-04-19 14:20:00 IST
  • கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்தவர்
  • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

பெரம்பலூர்,

குன்னம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் உடையான் (வயது 73), விவசாயி. இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உண்டு. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் தனித்தனியாக சமைத்து சாப்பிட்டு வந்தனர். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது 2 மகன்களும் இறந்துவிட்டனர்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு 2-வது மகனின் நினைவு நாள் வந்தது. அப்போது தனது 2 மகன்களுமே இறந்து விட்டனரே என்ற மன உளைச்சலிலும், வேதனையிலும் உடையான் காணப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை பழைய தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள தனது வயலுக்கு சென்ற உடையான், அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மீனாட்சி கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News