உள்ளூர் செய்திகள்

கதண்டு கடித்து விவசாயி பலி

Published On 2023-10-16 15:00 IST   |   Update On 2023-10-16 15:00:00 IST
  • திருப்பெயர் வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி கதண்டு கடித்து பலியானார்
  • காட்டில் கட்டியிருந்த மாட்டை அவிழ்க்க சென்ற போது கதண்டு கடித்துள்ளது

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே திருப்பெயர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 73), விவசாயி. நேற்று காலை பெருமாள் தனது காட்டில் கட்டியிருந்த மாட்டை கதண்டு கடித்தது. இதனால் அவர் மாட்டை அவிழ்த்து வேறு இடத்தில் கட்ட சென்றார். அப்போது பெருமாளையும் கதண்டு கடித்தது. இதுகுறித்து தகவலறிந்த பெருமாளின் மகன் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தந்தையை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் பரிதாபமாக இறந்தார்.

Tags:    

Similar News