உள்ளூர் செய்திகள்

மின்வேலியில் சிக்கி விவசாயி பலி

Published On 2023-10-24 06:21 GMT   |   Update On 2023-10-24 06:21 GMT
  • பசும்பலூர் கிராமத்தில் சோகம் வயலுக்குச் சென்ற விவசாயி மின்வேலியில் சிக்கி பலி
  • வ.களத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வ.களத்தூர் அடுத்த பசும்பலூரைச் சேர்ந்த ராமச்சந்திரன். இவர் அதே ஊரைச் சேர்ந்த பிச்சைபிள்ளை என்பவரின் வயலில் வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று பிச்சைப்பிள்ளை என்பவரின் மக்காச்சோள வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக காலை சுமார் 8 மணி அளவில் சென்றார் என கூறப்படுகிறது. பின்னர் வயலின் உரிமையாளர் ராமச்சந்திரனை தேடிய போது காட்டுப்பன்றிகளுக்காக போடப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கி ராமச்சந்திரன் வயலில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மின் இணைப்பை துண்டித்து ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.அதனை தொடர்ந்து வ.களத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டு அங்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து திட்டமிட்ட செயலா ?அல்லது விபத்தா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயுத பூஜை தினத்தன்று நடந்த இந்த சம்பவம் அந்த ஊர் மக்களை பெரும் சோகத்தில் மூழ்க வைத்துள்ளது.

Tags:    

Similar News