உள்ளூர் செய்திகள்

விவசாயி பலி

Published On 2023-07-24 14:42 IST   |   Update On 2023-07-24 14:42:00 IST
  • அகரம்சீகூர் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
  • மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அகரம்சீகூர்,

பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள முருக்கன்குடி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 45), விவசாயி. இவர் தனது உறவினர்களுடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள மின் மோட்டாரை ஆன் செய்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து, அவரது உறவினர்கள் அவரை மீட்டு அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News