உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2022-11-07 14:59 IST   |   Update On 2022-11-07 14:59:00 IST
  • விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
  • சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலத்தை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 36), விவசாயி. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 3-ந் தேதி சிவராஜ், விஷம் குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News