உள்ளூர் செய்திகள்

தொழில் முனைவோராக மாறிய தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி முன்னால் மாணவர்கள்

Published On 2023-09-06 08:31 GMT   |   Update On 2023-09-06 08:31 GMT
  • தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி முன்னால் மாணவர்கள் தொழில் முனைவோராகியுள்ளனர்
  • பல்கலைக்கழக வேந்தரிடம் வாழ்த்து

பெரம்பலூர்:

தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் விமானவியல் துறையின் முன்னாள் மாணவர்களான (2013 - 2017) திருச்சியைச் சேர்ந்த நித்தீஷ் புஷ்பராஜ், கடலூரைச் சேர்ந்த மணிமாறன் கணேசன், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட வேல்முருகன் செல்வராஜ் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறினர்.

பின்னர் அவர்கள் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசனை சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர்.

இந்த மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் TAV சிஸ்டம்ஸ் என்ற மின்சாரத்தினால் இயங்கும் இரு சக்கர மிதிவண்டி தயாரிப்பு நிறுவனத்தை ஆஸ்திரேலியாவின் ஃபிளிண்டர்ஸ்

பல்கலைக்கழகத்தின் உதவியுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு நிறுவி வெற்றிகரமாக நடத்தி

வருகின்றனர். மேலும் சென்னையில் அதன் கிளையையும் தொடங்கி உள்ளனர்.

கிளை நிறுவனம் சென்னையில் தொடங்கி சுமார் 100க்கும் மேற்பட்டோருக்கு

வேலைவாய்ப்பினை வழங்கி வருகிறது. சென்னையில் உற்பத்தி செய்யப்படும் மின்சார

மிதிவண்டிகள் ஆஸ்திரேலியாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இது குறித்து முன்னாள் மாணவர் நித்தீஷ் பேசியதாவது, நாங்கள் இந்த அளவிற்கு வாழ்வில்

முன்னேற்றம் அடைய மிகவும் உறுதுணையாக இருந்ததது இந்த தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் பயிலும் போது பெற்ற அறிவும், அனுபவமும், பேராசியர்களின் ஊக்கமும் மற்றும் பல்கலைக்கழக வேந்தரின் உந்து சக்தியாலும் தான் எங்களால் வெற்றிபெற முடிந்தது.

இந்த பாராட்டு நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் இளங்கோவன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் வேல்முருகன், கல்வி முதன்மையர் அன்பரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News