உள்ளூர் செய்திகள்

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

Published On 2022-11-03 14:45 IST   |   Update On 2022-11-03 14:45:00 IST
  • மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியானார்.
  • எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவரது மகன் பாரதி என்ற பார்த்திபன் (வயது 28), எலக்ட்ரீசியன். இவர் நேற்று மாலை 17 வயதுடைய சிறுவனை அழைத்து கொண்டு விளாமுத்தூர் கோகுலம் நகரில் வசிக்கும் ராஜா என்பவரின் வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலைக்கு சென்றார்.

அப்போது பார்த்திபன் வீட்டின் பின்புறம் உள்ள மின் விளக்கை சரி செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் பார்த்திபனுடன் வந்த சிறுவனிடம் மின்சாரத்தின் மெயின் சுவிட்சை ஆன் செய்யுமாறு கூறியுள்ளார். அப்போது பார்த்திபன் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பார்த்திபனை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பார்த்திபன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கிடங்கில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News