உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து முதியவர் தற்கொலை

Published On 2022-11-02 14:58 IST   |   Update On 2022-11-02 14:58:00 IST
  • விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
  • தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெய்குப்பை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சோலைமுத்து(வயது 80). இவர் அதே பகுதியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த 3 நாட்களாக தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சோலைமுத்து நேற்று காலை அரளி விதையை (விஷம்) அரைத்து தின்றார். இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சோலைமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

Tags:    

Similar News