உள்ளூர் செய்திகள்

மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் கூட்டம்

Published On 2023-01-11 12:18 IST   |   Update On 2023-01-11 12:18:00 IST
  • மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
  • கூட்டத்தில் கலந்து கொண்ட மின்நுகர்வோர்கள் தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டனர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் கூட்டம், பெரம்பலூர் செயற்பொறியாளர் மின்வாரிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட மின்நுகர்வோர்கள் தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டனர். கூட்டத்தில் மொத்தம் 7 மனுக்கள் பெறப்பட்டன. இதில் பெரம்பலூர் மின் வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார், உதவி செயற்பொறியாளர்கள், மின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News