உள்ளூர் செய்திகள்

விவசாயியை ஆட்டோ ஏற்றி கொல்ல முயன்ற டிரைவர் கைது

Published On 2023-08-06 13:54 IST   |   Update On 2023-08-06 13:54:00 IST
  • விவசாயியை ஆட்டோ ஏற்றி கொல்ல முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்
  • ஆட்டோ மோதி படுகாயம் அடைந்த விவசாயிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடி தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 63), விவசாயி. அதே தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (53), டிரைவர். இவர்கள் இருவருக்கும் நீண்ட நாட்களாக வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று காலை சீனிவாசன் டீசல் வாங்குவதற்காக தனது மொபட்டில் பூலாம்பாடியில் இருந்து அரும்பாவூர் நோக்கி சென்றுள்ளார். அப்போது கார்த்திகேயன் தனது சரக்கு ஆட்டோவை ஓட்டிச் சென்று முன்னால் மொபட்டில் சென்று கொண்டிருந்த சீனிவாசன் மீது மோதி உள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் சீனிவாசனை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயியை ஆட்டோ ஏற்றி கொல்ல முயன்ற கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News