உள்ளூர் செய்திகள்

தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-21 12:35 IST   |   Update On 2023-07-21 12:35:00 IST
  • தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடடனர்
  • வரகூர்அருணாசலம் தலைமையில் நடந்தது

பெரம்பலூர்,

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே மாவட்ட அ.தி.மு.க .சார்பில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான வரகூர்அருணாசலம் தலைமை வகித்தார். முன்னாள் எம்பிக்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்எல்ஏ தமிழ்ச் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், கட்சி அமைப்பு செய லாளருமான செம்மலை கலந்து கொண்டு மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, தேர்தல் வாக்குறு திகளை நிறைவே ற்றாதது, அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்களி, தக்காளி, வெங்காயம், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி பேசினார். பின்னர் திமுக அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

Tags:    

Similar News