உள்ளூர் செய்திகள்

ஓலைப்பாடி பச்சையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

Published On 2023-08-12 09:21 GMT   |   Update On 2023-08-12 09:21 GMT
  • ஓலைப்பாடி கிராமத்தில் பச்சையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது
  • ஏழு நாட்கள் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது

அகரம்சீகூர் , 

பெரம்பலூர் மாட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள ஓலைப்பாடி கிராமத்தில் பச்சையம்மன் கோவில் தீ மிதி திருவிழா நடைபெற்றது.இதில் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்,பக்கத்தர்கள் தீமிதித்தனர்.இவ்விழாவையொட்டி கடந்த 5-ம் தேதியன்று காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஏழு நாட்கள் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன .தொடர்ந்து நேற்று தீ மிதி திருவிழா நடைப்பெற்றது.இவ்விழாவில் ஓலைப்பாடி, வயலூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டணர். இவ்விழாவை வகையற காரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏற்பாடு செய்தனர்.குன்னம் போலிஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்புபணியில்யிடுப்பட்டனர்.

Tags:    

Similar News