உள்ளூர் செய்திகள்

ஆலோசனை குழு கூட்டம்

Update: 2023-03-24 06:47 GMT
  • ஆலோசனை குழு கூட்டம் நடந்தது
  • 5 பெண் தொழில் முனைவோர்களுக்கு ேகடயம்

பெரம்பலூர்:

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் ஆலோசனை குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நடப்பாண்டின் சிறந்த தொழில் முனைவோர்க்கான கேடயத்தை 5 பெண் தொழில் முனைவோர்களுக்கு கலெக்டர் கற்பகம் வழங்கினார். மற்றும் தொழில் தொடங்க பயிற்சி முடித்தவர்களுக்கு வங்கி கடனை வழங்கினார். இக்கூட்டத்தில் வங்கியின் தஞ்சாவூர் மண்டல துணை பொது மேலாளர் கோடிஸ்வரராவ், ரிசர் வ் பேங்க் ஆஃப் இந்தியா துணை பொது மேலாளர் ஸ்ரீதர் , முன்னோடி வங்கி மேலாளர் பாரத்குமார், மகளிர் திட்ட இயக்குனர் கருப்புசாமி, நபார்டு வங்கி மேலாளர் மோகன் கார்த்திக் , மாவட்ட தாட்கோ மேலாளர். சுந்தரம், பயிற்சி மைய இயக்குனர் ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News