உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

Published On 2023-07-30 10:27 IST   |   Update On 2023-07-30 10:27:00 IST
பெரம்பலூரில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கற்பகம் நேரில் ஆய்வு செய்தார்

பெரம்பலூர், 

பெரம்பலூரில், எளம்பலூர் மற்றும் செங்குணம் ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றும் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.எளம்பலூரில் ரூ.16.70 லட்சம் மதிப்பீட்டில் பிள்ளையார் கோவில் முதல் சுப்ரமணி வீடு வரை தார்சாலை அமைத்தல், ரூ.4.87 லட்சம் மதிப்பீட்டில் புதிய அம்ரித் சரோவர் குளம் வெட்டப்பட்டு முடிவற்ற பணி, செங்குணத்தில் ரூ.7.02 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்து, முடிவுற்ற பணி, கழிவுநீர் கால்வாயினை சுத்தம்செய்யும் பணி, செங்குணத்தில் ரூ.5.80 லட்சம் மதிப்பீட்டில் குளம் வெட்டும் பணி ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு செய்து பணிகள் குறித்து அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அதன் பின்னர் நியாய விலைகடையினை பார்வையிட்ட அவர் உணவு பொருட்கள் தரமாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது செங்குணம் மற்றும் எளம்பலூர் ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு சென்ற அவர், தனிநபர் இல்ல கழிப்பிடம் மற்றும் பல்வேறு திட்ட பணிகள், கணினி மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் பணிகள் போன்றவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின்போது உதவி இயக்குநர்(ஊராட்சிகள்)அருளானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News