உள்ளூர் செய்திகள்

மின் தடை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2023-08-13 14:30 IST   |   Update On 2023-08-13 14:30:00 IST
  • கீழப்புலியூர் கிராமத்தில் மின் தடை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
  • இரவில் நடந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது

அகரம்சீகூர்,

பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள கீழப்புலியூர் கிராமத்தில் பச்சையம்மன் கோவில் திருவிழா வேலைகள் நடைபெற்று வரும் வேளையில் கடந்த ஒருவார காலமாக அவ்வப்போது மின் தடை ஏற்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை 10 மணி முதல் இரவு வரை மின் தடை ஏற்பட்டதால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சிரமம் அடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் மற்றும் மின்வாரிய துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் இரவு 8.30 மணியளவில் அப்பகுதியில் மின்வினியோகம் செய்யப்பட்டது. இதற்கிடையே மீண்டும் மின் தடை ஏற்பட்டதால் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு மின் வினியோகம் சீரானது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News