உள்ளூர் செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கொத்தனார் பலி

Published On 2023-11-02 07:45 GMT   |   Update On 2023-11-02 07:45 GMT
  • குன்னம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கொத்தனார் பலி
  • மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஓதியம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை பிள்ளை(வயது 60). கொத்தானார் வேலை செய்து வரும் இவர், தனது உறவினர் ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக எரையூர் கிராமத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.

இறுதி சடங்கு முடிந்த பின்னர் இவர் ஊர் திரும்பி உள்ளார். பெரம்பலூர் - அரியலூர் தேசிய நெடுஞ்சாலை சித்தளி பிரிவு ரோட்டில் இவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர் மீது மோதி உள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பிச்சை பிள்ளையை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News