உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க. நிர்வாகியின் கடை சூறை

Published On 2022-09-17 08:59 GMT   |   Update On 2022-09-17 08:59 GMT
  • பா.ஜ.க. நிர்வாகியின் கடை சூறையாடப்பட்டது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் நகர பா.ஜ.க. தலைவர் ஜெயக்குமார் புதிய பஸ் நிலையத்தில் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு மர்மநபர்கள் அந்த கடையை அடித்து நொறுக்கிவிட்டு சென்றனர். தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தான் கடையை அடித்து நொறுக்கியதாக பா.ஜ.க.வினர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News