உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் சுருண்டு விழுந்த ஊழியரால் பரபரப்பு

Published On 2022-10-06 08:52 GMT   |   Update On 2022-10-06 08:52 GMT
  • போராட்டத்தில் சுருண்டு விழுந்த ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது.
  • 6 -வது நாளாக நீட்டிப்பு


பெரம்பலூர்:

பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியா்கள் தொடா்ந்து 6- வது நாளாக உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், ஊழியா் ஒருவா் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், ஆா்ப்பாட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறையில் உள்ள சுங்கச்சாவடியில் 180 ஊழியா்கள் பணிபுரிந்து வந்த நிலையில், 28 பணியாளா்களை தனியாா் ஒப்பந்த நிறுவனம் எவ்வித முன்னறிவிப்புமின்றி ஆள்குறைப்பு நடவடிக்கையாக கடந்த 30-ந் தேதி இரவு பணி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், பணியாளா்களை மீண்டும் பணியமா்த்தக் கோரியும் ஏ.ஐ.டி.யு.சி. சங்க கிளைத் தலைவா் ஏ.ஆா். மணிகண்டன் தலைமையில், சுங்கச்சாவடி அலுவலக வளாகத்தில் கடந்த 1 ஆம் தேதி காலை முதல் தொடா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கலெக்டர் ப.ஸ்ரீ வெங்கடபிரியா தலைமையிலான அலுவலா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். மேலும் இந்த அலுவலகம் பாண்டிச்சேரியில் அமைந்துள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சரு டன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால்

உடன்பாடு ஏற்படாததால் ஊழியா்கள் தொடா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஊழியா் மயக்கம்

இந்த நிலையில், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியரான கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள அதா்நத்தம் கிராமத்தைச் சோ்ந்த வரதராஜன் மகன் மாயவேல் (வயது38), மயங்கி விழுந்தாா். இதனை பார்த்த சக ஊழியர்கள் அவரை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதனால் ஆத்திரமடைந்த ஊழியா்கள், சுங்கச்சாவடி நிா்வாகத்தைக் கண்டித்தும், உரிய தீா்வு காண வலியுறுத்தியும் முழக்கமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Tags:    

Similar News