உள்ளூர் செய்திகள்

அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-10-28 06:33 GMT   |   Update On 2023-10-28 06:33 GMT
  • சு. ஆடுதுறை கிராமத்தில் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
  • கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

அகரம்சீகூர்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சு. ஆடுதுறை கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள விநாயகர், முருகன், அங்காள பரமேஸ்வரி அம்மன், பாவாடைராயர், வீரபத்திரர் இருளப்பர், மதுரை வீரன், ஐயப்பன் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு விநாயகர் பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கி முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.இரண்டாம் நாள் விநாயகர் பூஜை வருண பூஜை அஷ்டபந்தனம் பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகளோடு இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.கும்பாபிஷேகமத்தை முன்னிட்டு மேலும் மங்கள வாத்தியங்கள் , செண்டை மேளம் முழங்க யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.இதனையடுத்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோபுர விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இந்த கும்பாபிஷேக விழாவில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News