உள்ளூர் செய்திகள்

அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா

Published On 2023-11-15 07:10 GMT   |   Update On 2023-11-15 07:10 GMT
  • பெரம்பலூரில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நடைபெற்றது
  • விழாவை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது

பெரம்பலூர்,

70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில்  மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இணைப்பதிவாளரும் அலுவலக துணைபதிவாளருமான அப்துல் சலீம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். விழாவில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் இந்திரா, சங்க செயலாட்சியர் தாரணி மற்றும் அலுவலர்கள், சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News