உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் அருகே நிலம் அளக்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

Published On 2022-06-30 10:42 GMT   |   Update On 2022-06-30 10:42 GMT
  • பெரம்பலூர் அருகே விவசாயிகள் பணம் செலுத்தியும் விவசாயிகளின் நிலத்தை அளந்து கொடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மனு அளிக்கப்பட்டது
  • வருவாய் ஆய்வாளர் பணியில் இருக்கிறாரா, இல்லையா என்ற சந்தேகம் பொதுமக்களிடம் உள்ளது

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வரகூர் பிர்கா எல்லைக்கு உட்பட்ட ஓலைப்பாடி கிராமத்தில் சார்ந்த ராமலிங்கம் என்பவர் தனக்கு சொந்தமான ஓலைப்பாடி கிழக்கு பகுதி நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் அன்று ரூ.800 பணம் செலுத்தி உள்ளார்

மீண்டும் இந்த மாதம் 12-ந்தேதியன்று ரூ.400 பணம் செலுத்தி அளந்து கொடுக்க சொல்லியுள்ளார். ஆனால் சர்வேயர் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதேபோல் அப்பகுதியை சார்ந்த சாவித்திரி என்பவர் ஓலைப்பாடி கிழக்கு பகுதியில் நிலத்தை அளக்க கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணம் செலுத்தி தனது நிலத்தை அளந்து காட்ட வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார்.

இருந்தபோதலும் எந்த நடவடிக்கையும் இல்லாததை தொடர்ந்துகடந்த 1.10.2021 அன்று மீண்டும் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். அவருக்கும் எந்த அதிகாரியும் வந்து அளந்து கொடுக்கவில்லை.

வருவாய் ஆய்வாளர் பணியில் இருக்கிறாரா, இல்லையா என்ற சந்தேகம் பொதுமக்களிடம் உள்ளது. இவர்கள் மட்டுமின்றி இப்பகுதியில் பல விவசாயிகள் தங்கள் நிலத்தை அளந்து காட்டவேண்டும் என்று அரசுக்கு பணம் கட்டி மனு கொடுத்து காத்திருந்த வண்ணமே உள்ளனர்.

ஆனால் நடவடிக்கை மட்டும் எடுத்தது இல்லை. இது சம்மந்தமாக மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குன்னம் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

வரகூர் பிர்காவில் உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஏழை எளிய விவசாயிகளின் குறைகளை தீர்க்கும் வண்ணம் அவர்கள் நிலத்தினை உடனே அளந்து கொடுக்க கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் குன்னம் வட்டாட்சியர் என மாறி மாறி மனு கொடுத்து வருகின்றனர்.

இவர்களின் குறையை மாவட்ட நிர்வாகம் ஆராய்ந்து அவர்களின் நிலத்தினை அளந்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News