உள்ளூர் செய்திகள்

லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி

Published On 2023-03-23 06:46 GMT   |   Update On 2023-03-23 06:46 GMT
  • முன்னே சென்ற டிப்பர் லாரி மீது கார் மோதி விபத்து
  • படுகாயம் அடைந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை

அகரம்சீகூர்,

மதுரை மாவட்டம் ஆளவந்தான் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்த ஷாம்கண்ணன்(வயது 22), மதுரை கே.கே. நகரை சேர்ந்த சஷ்வந்த்( 25 ), மதுரை விநாயகர் நகரை சேர்ந்த ஆகாஷ்(24 ), மதுரையை சேர்ந்த அஜய் (22 ) ஆகியோர் மாருதி ஸ்விட் காரில் மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மங்களமேடு அடுத்துள்ள தம்பை பகுதியில் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்த மணிகண்டன்(33) என்பவர் ஓட்டி சென்ற ஜல்லி கல் லோடு ஏற்றிய டிப்பர் லாரி இவர்கள் சென்ற காருக்கு முன்னாள் சென்றுள்ளது. இந்த லாரியின் பின்புறம் கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. விபத்து நடந்த இடத்திலேயே ஷாம் கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்கள் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதில் படுகாயம் அடைந்த அஜய் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து வழக்கு பதிந்துள்ள மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News