உள்ளூர் செய்திகள்

உறவினர்களிடையே சரமாரி அரிவாள் வெட்டு

Published On 2023-07-20 08:27 GMT   |   Update On 2023-07-20 08:27 GMT
  • வயல் வரப்பு பிரச்சினையில் மாமன்- மைத்துனர் ஒருவருக்கொருவர் அரிவாளால் வெட்டி கொண்டனர்
  • பெரம்பலூர் மருத்துவமனையில் இருவருக்கும் சிகிச்சை

பெரம்பலூர்,

பெரம்பலூர் நொச்சியம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாமுண்டி (வயது 38). நொச்சியம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ் 35 இருவரும் மாமன் மைத்துனர் உறவு முறை கொண்டவர்கள். இருவரு க்கும் தங்களது வயல்களில் வரப்பு அமைப்பது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் மாமுண்டி நில அளவையரை வைத்து நிலத்தை அளந்து வரப்பு போட்டார்.இதை அறிந்து ஆத்திரமடைந்த அருள்ராஜ் மாமுண்டி வீட்டுக்குச் சென்று என்னை கேட்காமல் நீ எப்படி வரப்பு போட்டாய் என கேட்டு தகராறு செய்து ள்ளார். பின்னர் சத்தம் போட்டு அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் ஆத்திரம் அடங்காத அருள்ராஜ் சிறிது நேரம் கழித்து மீண்டும் மாமுண்டி வீட்டுக்குச் சென்று அவரது இடது கையில் கொடுவாளால் வெட்டினார். உடனே சுதாக ரித்துக் கொண்ட மாமுண்டி குடி போதையில் இருந்த அருள்ராஜ் கையில் இருந்த கொடு வாழை பிடுங்கி அவரது இரண்டு கணுக்கா ல்களிலும் வெட்டினார்.உறவினர்கள் வெட்டு க்காயம் அடைந்த மாமுண்டி மற்றும் அருள்ராஜ் ஆகிய இருவரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்து வமனையில் சேர்த்து ள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வரப்பு பிரச்சனை யில் மாமனும் மருமகனும் ஒருவருக்கொருவர் வெட்டி கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News