உள்ளூர் செய்திகள்

சாலை விதிகளை மீறியதாக 2,756 வழக்கு பதிவு

Published On 2022-11-04 15:43 IST   |   Update On 2022-11-04 15:44:00 IST
  • சாலை விதிகளை மீறியதாக 2,756 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
  • பெரம்பலூர் மாவட்டத்தில்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் சாலைவிதிகளை மீறியதாக 2 ஆயிரத்து 756 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எஸ்பி மணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழகம் முழுவதும் சாலை விதிகளை மீறுவோருக்கான அபராத தொகை உயர்த்தி நடைமுறை ப்படுத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறையினரால் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து புதிய அபராத தொகை விதிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் நேற்று வரை பெரம்பலூர் மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டுவது, வாகனத்தில் அதிக பாரத்தை ஏற்றி செல்வது, வாகனத்தில் பயணம் செய்யும் போது சீட்பெல்ட் அணியாமல் பயணம் செய்வது, வாகன உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது போன்ற சாலை விதிகளை பின்பற்றாத 2 ஆயிரத்து 756 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து சாலை விதிமுறைகளை பின்பற்றி விபத்துக்களை தவிர்க்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News