உள்ளூர் செய்திகள்

குழந்தை திருமணம் நடத்தினால் 2 ஆண்டு சிறை

Published On 2023-02-27 06:37 GMT   |   Update On 2023-02-27 06:37 GMT
  • சிறைதண்டனை 1 லட்சம் ரூபாய் அபராதம்
  • தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும்

பெரம்பலூர்,

நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது பெண் கல்வி. பெண் கல்விக்கு தடையாக இருப்பது குழந்தை திருமணம். குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள், குழந்தை திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் ஆகிய அனைவருக்கும் குழந்தை திருமண தடைச்சட்டம் 2006 பிரிவு 11-ன்படி, 2 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனையோ அல்லது ரூ.1 லட்சம் வரையிலான அபராதமோ தண்டனையாக விதிக்கப்படும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் பற்றி தகவல் தெரிந்தால் சைல்டு லைனை 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மாவட்ட சமூக நல அலுவலரை 9944350988 என்ற செல்போன் எண்ணிலும், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலரை 8668092093 என்ற செல்போன் எண்ணிலும், மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலரை 9443391931 என்ற செல்போன் எண்ணிலும், குழந்தை நலக்குழுவை 6369018347 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News