உள்ளூர் செய்திகள்

2 வாகனங்கள் தீ வைத்து எரிப்பு

Published On 2023-11-13 06:56 GMT   |   Update On 2023-11-13 06:56 GMT
  • பெரம்பலூர் பி.ஜே.பி. முன்னாள் மாவட்ட செயலாளரின் 2 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது
  • மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டம் ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால்(வயது 50). இவர் பி.ஜே.பி. கட்சியில் கடந்த 2021-ம் ஆண்டு மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். அதன் பின்னர் தற்போது பி.ஜே.பி.யில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தனபால் வீட்டு முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்ட எதிரே குடியிருக்கும் வரதராஜ் என்பவர் கூச்சலிட்டு உள்ளார். அவரின் கூச்சலை கேட்டு தனபால் வெளியே வர எந்தனித்து உள்ளார். ஆனால் வீட்டின் கதவை திறக்க முடியவில்லை.

இதற்கு காரணம் வீட்டின் முன்பக்க கதவை வெளிப்புறமாக தாழ்பாள் போடப்பட்டிருந்தது. பின்னர பொது மக்களுடன் உதவியுடன் கதவை திறந்து வெளியே வந்த தனபால், தீயை அணைத்துள்ளார். ஆனால் அதற்குள் 2 மோட்டார் சைக்கிள்களும் முழுவதுமாக எரிந்து கருகியது.

முன்விரோதம் காரணமாக அவரது2 மோட்டார் சைக்கிள்களை மர்மநபர்கள் எரித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News