இறந்த காட்டுபன்றியை தீயில் வாட்டிய 2 பேர் கைது
- இறந்த காட்டுபன்றியை தீயில் வாட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தலா ரூ.50 ஆயிரம் அபராதம்
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே வனவிலங்குகளை பிடித்து தீயிட்டு பொசுக்கிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ்க்கு கிடைந்த ரகசிய தகவலின் படி வனச்சரகர் பழனிகுமரன் தலைமையில் வனவர் குமார், வனக்காப்பாளர்கள் ரோஜா, ராஜி, அன்பரசு ஆகியோர் கொண்ட வனக்குழுவினர் ரோந்துப்பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது சிறுவாச்சூர்- வேலூர் சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகில் ஓடையில் இறந்த நிலையால் இரண்டு காட்டுப் பன்றிகளை தீயிட்டு பொசுக்கிக் கொண்டிருந்த 2 பேரை பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுவாச்சூரை சேர்ந்த சோலைமுத்து மகன் பொன்னுசாமி, கருணாநிதி மகன் மனோகரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து பொன்னுசாமி உட்பட 2 பேரை வனத்துறையினர் பிடித்து அவர்களிடமிருந்த காட்டுப்பன்றியின் உடல் மற்றும் 2 வாகனங்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து வனச்சரகர் பழனிகுமரன் வன பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து பொன்னுசாமி, கருணாநிதி ஆகியோரை கைது செய்து அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ. ஒரு லட்சம் விதித்து வசூல் செய்தனர்.