உள்ளூர் செய்திகள்

மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்று விழா

Published On 2022-08-02 10:01 GMT   |   Update On 2022-08-02 10:01 GMT
  • கொடியேற்று விழா மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
  • இந்த நிகழ்ச்சிகளுக்கு, மாவட்ட செயலாளர் ஜெயபால் முன்னிலை வகித்தார்.

ஓசூர்,

ஓசூர் தாலுக்கா அலுவலகம் முன்பு மற்றும் சீதாராம்நகரில் உள்ள மேற்கு மாவட்ட கட்சி அலுவலம் முன்பு கட்சியின் கட்டமைப்பு மாநில செயலாளர் சிவஇளங்கோ, தகவல், தொழில்நுட்பம் மற்றும் ஊடக பிரிவு மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம், கட்டமைப்பு மாநில துணை செயலாளர் ஜெய்கணேஷ், பொறியாளர் அணி மாநில செயலாளர் வைத்தீஸ்வரன் ஆகியோர் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியேற்று விழா மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளுக்கு, மாவட்ட செயலாளர் ஜெயபால் முன்னிலை வகித்தார். மேலும் இதில்மண்டல பொறியாளர் அணி அமைப்பாளர் சார்லஸ் ராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்வின் டேவிட் , பரந்தாமன், இளைஞரணி அமைப்பாளர் மசூத் , மாணவரணி அமைப்பாளர் தௌசிப், ஊடக பிரிவு அமைப்பாளர் பிரபாகரன், மாவட்ட தொழிலாளர் அணி நிர்வாகி அம்ரேஷ் , மகளிரணி நிர்வாகி ஜோய்ஸ் மேரி, மாநகர செயலாளர்கள் பால கிருஷ்ணன்,தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News