உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் 6 இடங்களில் மக்கள் நீதிமன்றம்

Published On 2023-05-11 07:16 GMT   |   Update On 2023-05-11 07:16 GMT
  • வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) தேசிய அளவிளான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.
  • மக்கள் நீதிமன்றத்தில் முடித்துக்கொள்ளும் வழக்கு களுக்கு மேல் முறையீடு கிடையாது.

நாமக்கல்:

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி, நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில் உள்ள ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகம், திருச்செங்கோட்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பரமத்தி சார்பு நீதிமன்றம், சேந்தமங்கலம் கோர்ட் மற்றும் குமாரபா ளையம் கோர்ட் ஆகிய இடங்களில், வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) தேசிய அளவிளான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.

ஏற்கனவே கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் சமரசம் செய்து கொள்ளக் கூடிய சிவில் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன், கல்வி கடன் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரி வினை, வாடகை விவ காரங்கள்) விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சனைகள் போன்ற வழக்குகள் இந்த நீதி மன்றத்தில் விசாரிக்கப்படும்.

மக்கள் நீதிமன்றத்தில் முடித்துக்கொள்ளும் வழக்கு களுக்கு மேல் முறையீடு கிடையாது. மக்கள் நீதின்றம் மூலமாக முடித்துகொள் ளும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமைமாக திருப்பி தரப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே பொது மக்கள் யாருக்காவது கோர்ட்டு களில், வழக்குகள் நிலுவையில் இருந்து, அவர்கள் மக்கள் நீதி மன்றத்தை அணுகினால் வழக்குகளுக்கு சட்ட ரீதியா கவும், சமரச முறையிலும் தீர்வு காணப்ப டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி யும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான குணசேகரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News