உள்ளூர் செய்திகள்

ஜப்தி செய்யப்பட்ட வீடு.

வீடு ஜப்தி நடவடிக்கையை கண்டித்து சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு

Published On 2022-07-20 09:40 GMT   |   Update On 2022-07-20 09:40 GMT
  • கோர்ட்டு உத்தரவின் பேரில் வீட்டை அதிகாரிகளிகள் ஜப்தி செய்தனர்.
  • வீடு எங்களுக்கு சொந்தம் என சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வடமதுரை:

திருச்சியை சேர்ந்தவர் பானு. இவருக்கு சொந்தமான வீடு திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் சந்தைபேட்டையில் உள்ளது. இந்த வீட்டில் பூ வியாபாரி மாரியம்மாள், ரேவதி உள்பட 5 பேர் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். மேலும் அந்த வீட்டை வாங்குவதற்காக குறிப்பிட்ட தொகையை பானுவிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டை பானு வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டை வாங்கிய நபர் இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகள் மற்றும் போலீசார் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த மாரியம்மாள் உள்பட குடும்பத்தார் நாங்களும் பணம் கொடுத்துள்ளோம். எனவே வீடு எங்களுக்குத்தான் சொந்தம் எனக்கூறினர். மேலும் அவ்வழியாக ெசன்ற பஸ்சை மறித்து சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைதொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தியால் அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News