உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

ஒட்டன்சத்திரம் அருகே யானைகள் நடமாட்டத்தால் மலைக்கிராம மக்கள் அச்சம்

Published On 2023-11-23 05:30 GMT   |   Update On 2023-11-23 05:30 GMT
  • ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள வடகாடு கிராமத்தில் 2 யானைகள் நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
  • யானைகளை வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள வடகாடு கிராமத்தில் 2 யானைகள் நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். மேற்குத்தொடர்ச்சி மலைக்கிராமத்தில் நேற்று மாலை 2 யானைகள் மலைப்பகுதியை விட்டு கீழே இறங்கி வந்ததை பார்த்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். யானைகளை ஒலி எழுப்பி விரட்டினார்கள்.

இருந்தபோதிலும் இரவு நேரத்தில் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் மலைக்கிராம மக்களிடையே பீதி ஏற்ப்பட்டுள்ளது.வடகாடு மலைக்கிராமங்களில் அடிக்கடி யானைகள் நடமாட்டத்தினால் அச்சமடைந்துள்ளனர்.

வனத்துறையினர் யானைகளை கடடுப்படுத்தவேண்டும் , வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News