உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

குமுளி அருகே சிறுத்ைத நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்

Published On 2023-09-16 04:57 GMT   |   Update On 2023-09-16 04:57 GMT
  • 5ம் நம்பர் தேயிலை தோட்டம் அருகிலும் சிறுத்ைத நடமாடியதால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் வண்டிபெரியார் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.
  • கடந்த ஒரு வாரத்தில் தேயிலை தோட்டத்தில் ஆடு, நாய்கள் கொல்லப்பட்டு இறந்து கிடந்தன.

கூடலூர்:

தமிழக-கேரள எல்லையான குமுளி அருகே மூங்கிலாறு பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் பணி முடிந்து திரும்பியபோது தேயிலை தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டத்தை பார்த்தனர்.

மேலும் 5ம் நம்பர் தேயிலை தோட்டம் அருகிலும் சிறுத்ைத நடமாடியதால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் வண்டிபெரியார் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.

கடந்த ஒரு வாரத்தில் தேயிலை தோட்டத்தில் ஆடு, நாய்கள் கொல்லப்பட்டு இறந்து கிடந்தன. சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக மக்கள் கூறிய இடங்களில் செல்லார் கோவில் வனத்துறை அதிகாரிகள் வினோத், விஜயகுமார் தலைமையில் வனத்துறை யினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

காமிராக்கள் பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கின்றனர். இதில் மூங்கிலார் 40 ஏக்கர் பகுதியில் வனத்துறை பொருத்திய கண்காணிப்பு காமிராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி உள்ளது.

இதனால் சிறுத்ைதயை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுத்தையை பிடிக்கும் வரை தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News