கோப்பு படம்.
தேனி மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் சிறப்பு நேர்காணல்
- ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஓய்வு பெற்ற மாதம் தெரியாத நிலையில் எந்த மாதத்திலும் இந்த ஆண்டு நேர்காணல் செய்து கொள்ளலாம்.
- ஆவணங்களு டன் உரிய மாதங்களில் அரசு வேலை நாட்களில் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை நேர்காணல் செய்யலாம்.
தேனி:
தேனி மாவட்டத்தில் ஜூலை, ஆகஸ்ட், செப்ட ம்பர் ஆகிய 3 மாதங்கள் மட்டும் நேர்காணல் நடத்த ப்படுவதால் அதிகளவிலான ஓய்வூதியர்கள் கருவூலத்தில் காத்திருப்பதை எளிமை யாக்கும் நோக்கத்தில் சிறப்பு நடைமுறை அறிமுகப்படுத்த ப்பட்டுள்ளது.
ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஓய்வு பெற்ற மாதம் தெரியாத நிலையில் எந்த மாதத்திலும் இந்த ஆண்டு நேர்காணல் செய்து கொள்ளலாம். ஓய்வூதியர்கள் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும், இணையதள மூலமாக ஓய்வூதியர்கள் நேர்காணல் மாதம் குறித்து அறிந்து கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள் இணையதள முகவரியில் இருந்தும் வாழ்வு சான்றிதழை பதிவிறக்கும் செய்து இந்திய தூதரக அலுவலர், மாஜிஸ்ட்ரேட், நோட்டரி பப்ளிக் அலுவலரிடம் வாழ்நாள் சான்று பெற்று சம்மந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். கருவூலத்திற்கு நேரடியாக வரும் ஓய்வூதியர்கள் ஓய்வூதிய புத்தகம், ஆதார் அடையாள அட்டை, வங்கிக்க ணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களு டன் உரிய மாதங்களில் அரசு வேலை நாட்களில் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை நேர்காணல் செய்யலாம்.
தமிழ்நாடு மின்வாரியம், உள்ளாட்சி, நகராட்சி மற்றும் மாந கராட்சி ஓய்வூதியர்கள் மற்றும் இதர நிறுவனத்தின் மூலம் ஓய்வூதியம் பெறுபவ ர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.