கெலமங்கலம் அருகே பரிதாபம்: தேர்வில் தோல்வி அடைந்ததால் உயிரை மாய்த்த பிளஸ்-1 மாணவி
- தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்கில் தொங்கினார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள கொளதாளம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் சந்தான ஸ்ரீ. இவர் தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மாணவி சந்தானஸ்ரீ தேர்வில் தோல்வி அடைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்ைட அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பாபு கெலமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
மாணவி தற்கொைல செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.