பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம்
- நல்லம்பள்ளியில் பட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
- ஜி.கே.மணி சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று கூட்டத்தில் சிறப்புரையாற்றினர்
தருமபுரி மாவட்டம், பாட்டாளி மக்கள் கட்சி, நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியத்தின் ஒன்றிய பொதுக்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் சிலம்பரசன் தலைமையில் பி.அக்ரகாரம் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. மாவட்ட இளைஞர் சங்க துணை தலைவர் செல்வம், ஒன்றிய தேர்தல் பணிக்குழு தலைவர் மாதையன், ஒன்றிய தலைவர் பூ.விஜியகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் ப.வீரமணி அனைவரையும் வரவேற்றார். பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று கூட்டத்தில் சிறப்புரையாற்றினர்.
மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முருகசாமி, மாவட்ட தலைவர் மு.செல்வகுமார், நிர்வாகிகள் உள்ளிட்ட ஒன்றியத்தின் அணி, துணை, கிளை பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். கூட்டத்தின் இறுதியில் ஒன்றிய பொருளாளர் சாந்தி வெங்கடேஷ் நன்றி கூறினார்.
ஒன்றியத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் கிளை கூட்டம், திண்ணைப் பரப்புரை மேற்கொள்ளுவது, தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீர் திட்டம் செயல்ப டுத்துதல், வன்னியர்களுக்கு 10.5 இடஒதுக்கீடு விரைந்து வழங்குதல், அனைத்து கிராமங்களுக்கும் பாதுகா க்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு க்குடிநீர் வசதி ஏற்படுத்துதல், கோணங்கிஅள்ளி ஊராட்சி, பி.அக்ரகா ரத்தில் பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவிலுக்கு பல்நோக்கு சமுதாய கூடம் அமைத்தல், எர்ரபை யனஅள்ளி ஊராட்சி, நெக்குந்தி கிரா மத்தில் மத்திய அரசின் இராணுவ ஆராய்ச்சி மையம் திட்டத்தை விரைந்து நிறைவேற்றுதல், எச்ச னஅள்ளி ஊராட்சி யில் கால்நடை மருத்துவ மனை அமைத்தல் போன்றவை குறித்து கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.