உள்ளூர் செய்திகள்

பகுதி நேர அங்காடியை ஒன்றிய கவுன்சிலர் குமார் தொடங்கி வைத்தார்.

பகுதி நேர அங்காடி திறப்பு

Published On 2022-09-22 10:26 GMT   |   Update On 2022-09-22 10:26 GMT
  • புதிய அங்காடியை திறந்து வைத்து, ரேசன் பொருள்கள் விநியோகத்தை தொடங்கி வைத்தார்
  • கிராமமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை ஊராட்சியில் கிருஷ்ணாபுரம்.

கள்ளிமேடு, வையாபு ரிதோப்பு பகுதி கிராமமக்கள் பயன்பெறும் வகையில் புதியதாக பகுதிநேர அங்காடி துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ராராமுத்திரகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சோழன் தலைமை வகித்தார்.

பாபநாசம் வட்ட வழங்கு அலுவலர் சிவக்குமார். கூட்டுறவு சார்பதிவாளர் ஆனந்தகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய கவுன்சிலர் பி.எஸ்.குமார் கலந்து கொண்டு புதிய அங்காடியை திறந்து வைத்து, ரேசன் பொருள்கள் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.

இந்த பகுதிநேர அங்காடி மூலம் கிருஷ்ணாபுரம். கள்ளிமேடு வையாபுரிதோப்பு பகுதியை சேர்ந்த 265 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.

நிகழ்ச்சியில் தனி வருவாய் ஆய்வாளர் அஜீத்குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் புனிதாபிரகலாதன், பூண்டி கூட்டுறவு சங்க செயலர் பிரிதிவிராஜ், ஊராட்சி செயலர் அசோக் மற்றும் அங்காடி ஊழியர்கள்.

கிராமமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News