உள்ளூர் செய்திகள்

பாரத் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடியபோது எடுத்தபடம்.

பணகுடி தளவாய்புரம் பாரத் பள்ளியில் ஆசிரியர் தினவிழா

Published On 2022-09-06 08:47 GMT   |   Update On 2022-09-06 08:47 GMT
  • பணகுடி அருகே உள்ள தளவாய்புரம் பாரத் ஆங்கில வழிக்கல்வி பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.
  • விழாவில் மாணவ - மாணவிகளின் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடைபெற்றது.

பணகுடி:

பணகுடி அருகே உள்ள தளவாய்புரம் பாரத் ஆங்கில வழிக்கல்வி பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.

மாணவர்களுக்கு விளக்கம்

பள்ளியின் தாளாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பள்ளியின் நிர்வாகி ஜெயராஜ் கலந்து கொண்டார்.

விழாவில் மாணவ - மாணவிகளின் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் லாரன்ஸ் பேசும்போது, ஆசிரியர் தினம் கொண்டாடுவதின் நோக்கம் குறித்தும், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்குரிய வழிமுறைகளை குறித்தும் எடுத்துக் கூறினார். பின்னர் மாணவ -மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் ஜெயபரமேஷ், துணை முதல்வர் சித்ரா மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News