உள்ளூர் செய்திகள்

கீழப்பாவூர் திருவாலீஸ்வரர் கோவிலில் பாலாலயம்

Published On 2023-06-08 08:53 GMT   |   Update On 2023-06-08 08:53 GMT
  • கும்பாபிஷேகம் நடத்துவதற்காக தமிழக அரசு ரூ. 83 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.
  • கோவிலில் 37 விக்கிரகங்கள் பாலாலயம் செய்யப்பட்டது.

தென்காசி:

பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் உள்ள பிரசித்தி பெற்ற சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

முதல் கட்ட பணிகள்

இந்த கோவிலை பராமரித்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக தமிழக அரசு ரூ. 83 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி முதற்கட்ட பணிகளாக கோவிலில் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் கலாகர்ஷணம், முதற்கால யாகசாலை பூஜை, ஹோமம், தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சலனம் செய்து பாலாலயம் நடைபெற்றது. இந்த கோவிலில் 37 விக்கிரகங்கள் பாலாலயம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, துணை ஆணையர் வெங்கடேஷ், செயல் அலுவலர் முருகன், ஆய்வாளர் சேதுராமன், அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இக்கோவிலுக்கு கடைசியாக 2003-ம் ஆண்டு கும்பாபி ஷேகம் நடை பெற்றுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை காண பக்தர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Tags:    

Similar News