உள்ளூர் செய்திகள்

திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் பழங்குடி மக்களுக்கு வீடு கட்டும் பணி ஆணை

Published On 2022-12-22 07:12 GMT   |   Update On 2022-12-22 07:12 GMT
  • பழங்குடி இன மக்கள் 18 பேருக்கு பழங்குடியினர் நலத்துறை சார்பில் வீடு கட்டுவதற்கான பணிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவாசகம், முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் வாழ்ந்து வரும் பழங்குடி இன மக்கள் 18 பேருக்கு பழங்குடியினர் நலத்துறை சார்பில் வீடு கட்டுவதற்கான பணிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவாசகம், முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக வானூர் ஒன்றிய குழு தலைவர் உஷா முரளி கலந்து கொண்டு 18 பேருக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கி பேசினார். விழாவில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் முரளி, கவுன்சிலர் புவனேஸ்வரி ராமதாஸ், ஊராட்சி செயலர் ஏழுமலை, வார்டு உறுப்பினர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News