உள்ளூர் செய்திகள்

சயன கோலத்தில் பெருமாள் பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

Published On 2023-01-02 08:00 GMT   |   Update On 2023-01-02 08:00 GMT
  • தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்று.
  • இந்த கோவிலில் திருவாதிரை திருநாள் கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சங்கரன்கோவில்:

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருநாள் கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் 6-ம் திருநாளான இன்று காலை 9.20 மணிக்கு பெருமாள் சயன கோலத்தில் பரமபத வாசல் வழியாக வந்து பெரிய ஆழ்வார் மற்றும் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய திரு விழாவான வருகிற 6-ந் தேதி ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடக்கிறது.

Tags:    

Similar News