உள்ளூர் செய்திகள்

சிறுதானியம் குறித்த தனி அரங்கு திறப்பு

Published On 2023-08-03 09:34 GMT   |   Update On 2023-08-03 09:34 GMT
  • சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சிறுதானிய தனி அரங்கை திறந்து வைத்தார்.
  • சிறுதானியங் களில் செய்யப்பட்ட உணவு வகைகள் நன்மை குறித்து மகளிர் திட்ட பணியாளர்கள் எடுத்துரைத்தனர்.

தொப்பூர், 

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் பகுதியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்ட ஆடிப்பெருக்கு விழாவில் மகளிர் திட்டம் சார்பில் சிறுதானிய பயன்பாடுகள் குறித்த தனி அரங்கை அமைச்சர் திறந்து வைத்தார்.

அவற்றில் சிறுதானியங் களில் செய்யப்பட்ட உணவு வகைகள் காட்சிப் படுத்தப்பட்டு அவற்றால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு, மகளிர் திட்ட பணியாளர்கள் எடுத்துரைத்தனர்.

இவ்விழாவில் மகளிர் திட்ட இயக்குனர் முகமது நசீர், உதவி திட்ட அலுவலர்கள் கார்த்தி கேயன், முருகேசன், வட்டார மேலாளர் பிரதீப், மற்றும் ரமேஷ் மாவட்ட பயிற்றுநர் வட்டார ஒருங்கிணைப் பாளர் வெற்றி வேல் மற்றும் வட்டார ஒருங்கிணைப் பாளர் ஜான்சி ராணி, கண்ணகி, லலிதா, தமிழ்ச்செல்வி, விஜய லட்சுமி, செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News