உள்ளூர் செய்திகள்

புதிதாக திறக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். ஆய்வகத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டார்.

மன்னாாகுடி ஆர்.டி.பி.சி.ஆர் ஆய்வகம் திறப்பு

Published On 2022-08-28 10:31 GMT   |   Update On 2022-08-28 10:31 GMT
  • அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே ஆர்டிபிசிஆர் ஆய்வகமானது செயல்பட்டு கொண்டிருந்தது.
  • வைரஸ் தொற்று, மஞ்சள் காமாலை, டெங்கு போன்ற பல்வேறு வகையான வைரஸ் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்கப்படும்.

மன்னார்குடி:

சென்னையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு த்துறையின் சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு தலைமை மருத்து வமனையில் ரூ.1 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் ஆர்டிபிசிஆர் ஆய்வகத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சித்தலைவர்
பால சுப்ரமணியன்கலந்து கொண்டனர்.

இவ்வாய்வ கத்தின் மூலம் கொரோனா வைரஸ் தொற்று, மஞ்சள் காமாலை, டெங்கு போன்ற பல்வேறு வகையான வைரஸ் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்கப்படும்.

இதுவரை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே ஆர்.டி.பி.சி.ஆர் ஆய்வகமானது செயல்பட்டு கொண்டிருந்தது.

தற்போது கூடுதலாக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவ மனையிலும் ஆர்.டி.பி.சி.ஆர் ஆய்வகமானது செயல்படுகிறது.

இதன்மூலம் மன்னார்கு டியை சுற்றியுள்ள பகுதிக ளிலுள்ள பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் மரு.செல்வகுமார், மன்னார்குடி ஆர்.டி.ஓ கீர்த்தனா மணி, மன்னார்குடி நகரமன்ற தலைவர்.சோழராஜன், துணை தலைவர் கைலாசம், மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.விஜயகுமார்,மருத்துவமனை நிலைய அலுவலர் மரு.கோவிந்தராஜ், ஆர்டிபிசிஆர் ஆய்வக அலுவலர் மரு.பாரதிகண்ணமா, தேசிய நல்வாழ்வு குழும அலுவலர் மரு.வினோத்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News